Saama Kodaangi |
---|
ஏ சாமக்
கோடாங்கி உடுக்க
போல் என்ன பொழுதும்
உலுக்குறியே இந்த சீம
முச்சூடும் நிறைஞ்சி
நின்னாலும் சிரிச்சே நீ
என்ன கொல்லுறியே
ஏ சாமக்
கோடாங்கி உடுக்க
போல் என்ன பொழுதும்
உலுக்குறியே இந்த சீம
முச்சூடும் நிறைஞ்சி
நின்னாலும் சிரிச்சே நீ
என்ன கொல்லுறியே
என் முத்துநவ
ரத்தினமே முந்தி அணிஞ்சி
நீ வந்து நிக்க போகுது என்
கண்ணு அவிஞ்சி
கனவே இல்லாத
கரும்பா உம் பேச்சு
மனச தித்திப்பா மாத்திடுச்சி
கோடி ரூவாய
கொடையா தந்தாலும்
ஒதுக்கி வைப்போமுங்க
எட்டு மாடி வீடெல்லாம்
எதுக்கு வேணாங்க
ஓல கொட்டாயே
போதுமுங்க
காடு பூராவும்
உதவும் சொந்தந்தான்
கலங்கமாட்டோமுங்க
வேற ஆளு உள்ளார
துணிஞ்சி வந்தாலே
உசுர தந்தாச்சும்
காப்போமுங்க
ஹே கட்டையில
போறதுதான் இந்த உசுரு
இத கண்ணியமா வைச்சுகிட்டா
என்ன தவறு
எதையும் தன்னுள்ள
மறைச்சி வைக்காத காடா
வாழ்வோமே நாங்க நாங்க
ஆசைப்பட்டாலும்
எதையும் கேட்காம
எடுக்க கூடாதுங்க வெளி
வேசம் போடாம நெசமா
வாழ்ந்தாலே எதுவும்
தன்னால கைகூடுங்க
வேரே இல்லாம
மரமும் வாழாது விவரம்
சொல்வோமுங்க வெந்த
சோறே ஆனாலும் உழைச்சி
திங்காட்டி உடம்பில் ஒட்டாது
கேட்டுக்குங்க
ஆண் : ஹே உத்தமனா
வாழும்வரை இல்ல கவல
நீ உன்ன நித்தமும் நம்பும்
வரை உண்டு ரகல
வழியும் மாறாம
நடந்தா தப்பில்ல
நிமுந்து வாழ்வோமே
ஊரே சொல்ல