Saara Paambu

Saara Paambu Song Lyrics In English




சார பாம்ப போல
ஏ சாட காட்டுற ஆள
அடி சல சலக்குற மேல
நான் சுத்துறேன் தன்னால
சாமி வந்தது போல
அட ஆட வைக்கிற ஆள
அட ஏன்டி இந்த வேளை
நான் சுத்துறேன் பின்னால

என் கண்ணால பேச
அட ஒடம்பெல்லாம் கூச
இனி பூ பூக்கும் ஆசை
அது எல்லாம் உன்னால
களவாணி வாசம்
இனி என்ன சுத்தி வீசும்
அட தலகாணி பேசும்
எனக்கு ஒன்னும் தெரியல

வாடி செல்ல கிறுக்கி
நெஞ்சுக்குள்ள வச்சேன் உன்ன உருக்கி
வயச கூட்டி பெருக்கி
குத்திகிட்டேன் உசுர நூலா நறுக்கி

சார பாம்ப போல
ஏ சாட காட்டுற ஆள
அடி சல சலக்குற மேல
நான் சுத்துறேன் தன்னால
சாமி வந்தது போல
அட ஆட வைக்கிற ஆள
அட ஏன்டி இந்த வேளை
நான் சுத்துறேன் பின்னால

மனசுக்குள்ள உன்ன நட்டு வச்சேன்
பூத்து காச்சு குலுங்குற நீ
ஆத்தா வளத்த கோழி குஞ்ச போல
பாசத்தால கொத்துறடி நீ

உள்ளங்கால் ரேகையா ஒட்டிக்கிடவா
உன்னோட சட்ட போல கட்டிக்கிடவா
உன் பேர நெஞ்சு மேல வெட்டிக்கிடவா
உனக்காக என்ன நானே திட்டிக்கிடவா

ஏ எனக்கேத்த வேட்டுகாரி
அழகான சண்டகாரி
வாடி வாடி வாடி
முழுசாதான் உன்ன தாடி

சார பாம்ப போல
ஏ சாட காட்டுற ஆள
அடி சல சலக்குற மேல
நான் சுத்துறேன் தன்னால
சாமி வந்தது போல
அட ஆட வைக்கிற ஆள
அட ஏன்டி இந்த வேளை
நான் சுத்துறேன் பின்னால


அடி நீ உசுரே
உசுரே உசுரே

காணாம் போனேன்
கண்டெடுத்த நீதான்
இதுல எதுக்கு பஞ்சாயத்துதான்
மனசுக்குள்ள மாளிகையே இருக்கு
ஊர தாண்டி வாடி உள்ளதான்

வாரேன்டா ராத்திரியில் பூத்து கிடக்கு
மேலாட மீசைக்குத்தான் காத்து கிடக்கு
யார் என்ன சொன்னாலும் நான்தான் உனக்கு
ஊர் என்ன சொன்னாலும் நீதான் எனக்கு

ஏ ஜாதகத்த மாத்திபுட்டேன்
ஊரு சனம் உச்சி கொட்ட
வாரேன் வாரேன் வாரேன்
உனக்கு நான் தாலி கட்ட

சார பாம்ப போல
ஏ சாட காட்டுற ஆள
அடி சல சலக்குற மேல
நான் சுத்துறேன் தன்னால
சாமி வந்தது போல
அட ஆட வைக்கிற ஆள
அட ஏன்டி இந்த வேளை
நான் சுத்துறேன் பின்னால

என் கண்ணால பேச
அட ஒடம்பெல்லாம் கூச
இனி பூ பூக்கும் ஆசை
அது எல்லாம் உன்னால
களவாணி வாசம்
இனி என்ன சுத்தி வீசும்
அட தலகாணி பேசும்
எனக்கு ஒன்னும் தெரியல

தீயா ஏன்டி சிரிச்ச
ராத்திரியில் உசுர நீயும் எரிச்ச
பாய நீயே விரிச்ச
பட்டுனுதான் பசிய மூடி மறைச்ச