Sabari Malaiyil Vanna Chandrodhayam |
---|
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
பாலெனச் சொல்லுவது உடலாகும்
அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்
வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும்
இந்த நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
வாசமுடைய பன்னீர் அபிஷேகம்
எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம்
அதில் இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
உள்ளத்தில் வெண்மை தன்னை கையிலெடுத்து
அதில் உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு
உருகும் விபூதியினால் அபிஷேகம்
ஹரி ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
ஐயப்பா நீதான் மெய்யப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா