Sahaayanae Sahaayanae

Sahaayanae Sahaayanae Song Lyrics In English


சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை
நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள்
தாக்கி என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்

சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

ஒரு முறை உன்
பேரை உதடுகள் சொன்னாலே
பசி இன்றி போவதென்ன பல
முறை சொன்னாலும் உறங்கிட
எண்ணாமல் விழி ரெண்டும்
கேட்பதென்ன தவறி விழுந்த
பொருள் போல் என்னை
எடுத்தாயடா தவணை முறையில்
உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னை கையில்
ஏந்து எல்லை ஏதும் இல்லை
அன்பில் நீந்து நீந்து

சகாயனே சகாயனே


கனவிலும் காணாத
வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இதுவரை கேட்காத இசை
என உன் பேச்சு அளவில்லா
ஆட்டம் போட இறந்து இறந்து
பிறக்கும் நிலை இதுதானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும்
வரம் கொடுத்தாயடா கள்ள
பார்வை என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம்
எண்ண எண்ண

சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை
நீ ஏன் பறித்தாய்