Sala Sala |
---|
நீரில் இறங்காமல்
நீச்சல் வாராது
நீந்தத் தெரிந்தாலே
நீ மூழ்கக் கூடாது
காயம் நேராது வெற்றி இங்கேது
முட்கள் இல்லாமல் கடிகாரம் ஓடாது
சல சல சலவென்று நதி போல ஓடு
கல கல கலவென்று தோல்வியை கொண்டாடு
கிடு கிடு கிடுவென்று நீ முன்னேறு
கட கட கடவென்று வானிலே நீ ஏறு
பல தடை இருந்தாலும்
வழி தேடு
நம் வழியினில் தடைகள்
சரி பாதி விழுக்காடு
ஒரு சிங்கம் போல நடை போடு
தினம் வெற்றி என்னும்
ராகத்தை நீ பாடு
நெஞ்சில் வந்தாயே
என்னை தந்தேனே
வாழ்வில் எப்போதும்
எல்லாமே நீ தானே
உந்தன் துணையோடு
யாவும் வெல்வேனே
நீயும் இல்லாமல் நானில்லை
பொன் மானே
ஆடாமல் நில்லடா
வீழாமல் வெல்லடா
புயலாய் அடங்காமல்
தினம் ஓடி நீ வாடா
நீ வீரம் கொள்ளடா
காயங்கள் தள்ளடா
தீயில் போட்டாலும் பொன்னாக
நீ நின்று வெல்லடா வெல்லடா
வழ வழப்பாக
ஒரு சாலை உண்டா
சுறு சுறுப்பாக
ஓட்டமாய் நீ ஓடு
கட கடமுடவென்று
ஒரு தாளம் கேட்டால்
சுட சுடச் சுடவென்று
சங்கீதம் நீ பாடு
வாழ்வில் எப்போதும்
தென்றல் வீசாது
புயலை கண்டாலும்
நீ சாயக் கூடாது
மண்ணை நம்பாமல்
வைரம் தோன்றாது
உன்னை நீ நம்பு
ஒரு துன்பம் வாராது
ஹோ ஓஓ
உன்னை முழுவதும் வென்று
நீ வாழ்ந்து காட்டு
உன் பயங்களை எல்லாம்
மொத்தமாய் தீ மூட்டு
நீ அழுபவன் என்றால்
அது அடுக்காது
இந்த அழகிய வாழ்க்கை
மறுபடி கிடைக்காது
ஒரு சாதனை செய்ய
போராடு
தலை குனிந்து பார்க்க
நீ இல்லை பலி ஆடு
நீ பிறந்தது ஏனோ
விடை தேடு
துளி வேர்வை இன்றி
கிடைக்காது சாப்பாடு
மேலும் மென்மேலும்
வெற்றி வந்தாலும்
என்றும் எப்போதும்
சரி பாதி உனக்குண்டு
இன்பம் வந்தாலும்
துன்பம் வந்தாலும்
எந்தன் வாழ்வோடு
எப்போதும் நீ உண்டு
அவமானம் இல்லையேல்
வெகுமானம் ஏதடா
உன்னை மிதித்தாலும்
முன்னேறி நீ வாடா
சோம்பேறி என்பவன்
வாழ்ந்தாலும் கல்லடா
நொடியும் தூங்காமல்
வேண்டாமல் நீ சென்று
வெல்லடா வெல்லடாஆஅ