Sambo Sambo Sami Saranam |
---|
சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
ரத்தம் கேட்டு போகும்போது
ஞானம் மேலே ஏறுது
சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்
காயாத கானகத்தே ச்சீ
காஞ்சி போன ஆத்தினிலே
துணி துவைக்கும் சுந்தரி
ஊரும் மேயாத கழுதை வரக்
கண்டதுண்டோடி ஏய்
ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும்
நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும்
ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும்
நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும்
துணையா இருக்கும் நெஜமா சுரமா படிக்கும்
அழகா மூக்கு அதுவும் உன்னப் போல இருக்கும்
காணாம அங்கும் இங்கும்
நான் தேடி வந்தேனே
கண்ணாட்டி உன்னக் கண்டு
அது கேட்டு நின்னேனே
போகட்டும்டி என் கழுத சொல்லுடி சம்மதத்த
சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்
சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம்
அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம்
சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம்
அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம்
உறவா இருக்கும் ஆனா உடனே மொறைக்கும்
உள்ளே எரிக்கும் ஆனா வெளியே சிரிக்கும்
என்னத்தான் சோப்பு போட்டும்
வெளுக்காத எண்ணங்கள்
வெள்ளாவி வச்சுப் பாத்தும்
அழுக்கான உள்ளங்கள்
அம்மாடி உள்ளுக்குள்ளே அம்புட்டும் கள்ளமுங்க
சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
ரத்தம் கேட்டு போகும்போது
ஞானம் மேலே ஏறுது
சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்
சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்