Sandhana Malargalai

Sandhana Malargalai Song Lyrics In English


சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று
அருவியிலே நனையுதடி செண்பகப் பூ ஒன்னு
சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று
அருவியிலே நனையுதடி செண்பகப் பூ ஒன்னு
அருகினிலே துணை இருந்தும் தவிக்குதடி நின்னு

பார்க்கப் பார்க்கத் தூண்டும்
கதைகள் பல அதில் தோன்றும்
படைத்தவன் அழகில் படித்தேன் ஆயிரம்

படித்ததை கதையாய் முடிப்பேன் ஆயிரம்



ஆ ஜிங்கில் பெல்லு ஜிங்கில் பெல்லு ஜிங்கிலே ஜிங்கிலு
ஹையோ பாட்டி நீ பாடினீங்க
நாங்கெல்லாம் தண்ணீல குதிச்சிடுவோம்
ஏன்டா கண்ணுங்களா அப்டி சொல்றீங்க
இதக் கேளுங்க
டுவைங்கிள் டுவைங்கிள் சூப்பர் ஸ்டார்
ஔவையாரு லிட்டில் ஸ்டார்
ஹையோ தப்பு
இதுவுமா தப்பு

பூனைகள் இரண்டு அப்பம் பிரித்திட
குரங்கிடம் சென்றதம்மா
நாணையம் இன்றி குரங்கும் அப்பத்தை
தவறாய் பிரித்ததம்மா
சிறியதில் கொஞ்சம் குறையுது என்று
பெரியதை தின்றதம்மா
பெரியதில் கொஞ்சம் குறையுது என்று
சிறியதை தின்றதம்மா

உள்ளதும் அங்கே போச்சு
உலகுக்குப் பாடம் ஆச்சு
உள்ளதும் அங்கே போச்சு
உலகுக்குப் பாடம் ஆச்சு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
என்பது புரிந்ததா

சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று
அருவியிலே நனையுதையா செண்பகப் பூ ஒண்ணு
அழகினிலே மயங்குதையா தனிமையிலே நின்னு



வரம் ஒன்று கேட்ட மனிதனின்
முன்னால் இறைவனும் வந்தாராம்
தொட்டவை எல்லாம் பொன்னாய் மாறும்
வரம் ஒன்று தந்தாராம்
எண்ணியதெல்லாம் கையால் தொட்டு
பொன்னாய் செய்தானாம்
உண்ணும் உணவும் பொன்னாய்ப் போக
கவலை கொண்டானாம்

ஆசை வைத்தான் மனிதன்
அடங்க வைத்தான் இறைவன்
ஆசை வைத்தான் மனிதன்
அடங்க வைத்தான் இறைவன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து தெரிந்ததா


சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று
அருவியிலே நனையுதடி செண்பகப் பூ ஒன்னு
அருகினிலே துணை இருந்தும் தவிக்குதடி நின்னு

பார்க்கப் பார்க்கத் தூண்டும்
கதைகள் பல அதில் தோன்றும்

படைத்தவன் அழகில் படித்தேன் ஆயிரம்

ஆ ஆ ஆ ஆ

படித்ததை கதையாய் முடிப்பேன் ஆயிரம்

ஆ ஆ ஆ ஆ
சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று

அருவியிலே நனையுதடி செண்பகப் பூ ஒன்னு

லால்ல லால்லா

அருகினிலே துணை இருந்தும் தவிக்குதடி நின்னு

லால்ல லால்லா