Sangadam Pokkida

Sangadam Pokkida Song Lyrics In English


இசை அமைப்பாளர் : தசரதன்

சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும்
ஐங்கரன் சோதரனே ஐயப்பா
சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய
மறையவர் திருமகனே ஐயப்பா

சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும்
ஐங்கரன் சோதரனே ஐயப்பா
சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய
மறையவர் திருமகனே ஐயப்பா

நாரணன் உருவாய் அமரரை காத்திட
மணியுடன் வந்தவனே
மாதவர் யோகியர் பணிவுடன் வணங்கிடும்
முனிவர்கள் நாயகனே

பேதைமை அகற்றி மேன்மையெல்லாம் தரும்
வித்தக மாமணியே
நல்லருள் கேட்டு உனை வேண்டிய
குருவின் பாலனை காத்தவனே


சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும்
ஐங்கரன் சோதரனே ஐயப்பா
சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய
மறையவர் திருமகனே ஐயப்பா

சத்தியம் சேர்ந்திடும் சகலர் நல்வாழ்வையும்
சந்தருள் செய்பவனே
நித்திய வாழ்வினை நடத்திடும் நாதனாய்
உலகினை ஆள்பவனே

வருவதும் போவதும் விதியென கூறிடும்
வழக்கினை தீர்ப்பவனே
வருவதும் நீயென பெறுவதும் நீயென
தத்துவம் ஆனவனே

சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும்
ஐங்கரன் சோதரனே ஐயப்பா
சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய
மறையவர் திருமகனே ஐயப்பாஐயப்பா