Sangeetham En Nimmadhi

Sangeetham En Nimmadhi Song Lyrics In English


சங்கீதம் என் நிம்மதிஆஆஆஆ
சங்கீதம் என் நிம்மதி
ஸநிதநிஸ ஸரிஸநிதநி ஸரிகமரிகரி
கமதகமதநி மதநிஸ தநிஸ ஸரிசா
ஸரிஸரிஸரிஸரி ஸநிதமகரிஸா

சங்கீதம் என் நிம்மதி
சப்தஸ்வரம் தானே என் சன்னிதி
கையேந்தும் பொன் வீணை
கேட்காதோ என் ஆணை
இதுதானே ஹம்சாநந்தி
இதுதானே ஹம்சாநந்தி

மானோடு மழுவேந்தி மன்றத்தில் நின்றாடும்
மறைப் போற்றும் பரமேஸ்வரன்

மறைப் போற்றும் பரமேஸ்வரன்
அவன் தாள் போற்றி நாள் தோறும்
செய்நன்றி மறவாத வாள் வீரன் இலங்கேஸ்வரன்
வாள் வீரன் இலங்கேஸ்வரன்

சங்கீதம் என் நிம்மதி

ஆஆஆஆ

கடல் நான்கும் தாலாட்டும் வளமான நாடு
கஸ்தூரி மான் கூட்டம் விளையாடும் காடு
பூங்காற்றும் தாண்டாது நான் போட்ட கோடு
இந்த புவி வேந்தன் நானாகும் எனக்கேது ஈடு


சங்கீதம் என் நிம்மதி

மயிலேதோகை இள மயிலே
ஸரிக மகரிஸநி ஸரிக
பருவ மேனி பரதமாட பதமும் பாட
விழியில் எழுதும் கவிதை யாவும் இசை முழங்க
கமகதாத மதமநிநி தநிதசாஸ
நிஸநிதநித மதமகரிஸநி ஸரிக

வண்ணத் தாமரை ஆடை சூடி வர
வஞ்சிப் பூங்கொடி ஜாடைப் பேசி வர
விழிக்குள் பிறக்கும் மயக்கம்

கட்டுப் பூங்குழல் காற்றில் நீந்தி வர
இன்பக் காவியம் கண்ணில் ஏந்தி வர
கலைக்கோர் விளக்கம் கிடைக்கும்

நான் வாழும் மணிமாடம்
ஆனந்த கலைக்கூடம் ஓயாத சந்தோஷமே
வான் வாழும் தேவர்க்கும் வாய்க்காது எந்நாளும்
நான் காணும் சௌபாக்கியமே

சங்கீதம் என் நிம்மதி
சப்தஸ்வரம் தானே என் சன்னிதி