Sangeetham En Nimmadhi |
---|
சங்கீதம் என் நிம்மதிஆஆஆஆ
சங்கீதம் என் நிம்மதி
ஸநிதநிஸ ஸரிஸநிதநி ஸரிகமரிகரி
கமதகமதநி மதநிஸ தநிஸ ஸரிசா
ஸரிஸரிஸரிஸரி ஸநிதமகரிஸா
சங்கீதம் என் நிம்மதி
சப்தஸ்வரம் தானே என் சன்னிதி
கையேந்தும் பொன் வீணை
கேட்காதோ என் ஆணை
இதுதானே ஹம்சாநந்தி
இதுதானே ஹம்சாநந்தி
மானோடு மழுவேந்தி மன்றத்தில் நின்றாடும்
மறைப் போற்றும் பரமேஸ்வரன்
மறைப் போற்றும் பரமேஸ்வரன்
அவன் தாள் போற்றி நாள் தோறும்
செய்நன்றி மறவாத வாள் வீரன் இலங்கேஸ்வரன்
வாள் வீரன் இலங்கேஸ்வரன்
சங்கீதம் என் நிம்மதி
ஆஆஆஆ
கடல் நான்கும் தாலாட்டும் வளமான நாடு
கஸ்தூரி மான் கூட்டம் விளையாடும் காடு
பூங்காற்றும் தாண்டாது நான் போட்ட கோடு
இந்த புவி வேந்தன் நானாகும் எனக்கேது ஈடு
சங்கீதம் என் நிம்மதி
மயிலேதோகை இள மயிலே
ஸரிக மகரிஸநி ஸரிக
பருவ மேனி பரதமாட பதமும் பாட
விழியில் எழுதும் கவிதை யாவும் இசை முழங்க
கமகதாத மதமநிநி தநிதசாஸ
நிஸநிதநித மதமகரிஸநி ஸரிக
வண்ணத் தாமரை ஆடை சூடி வர
வஞ்சிப் பூங்கொடி ஜாடைப் பேசி வர
விழிக்குள் பிறக்கும் மயக்கம்
கட்டுப் பூங்குழல் காற்றில் நீந்தி வர
இன்பக் காவியம் கண்ணில் ஏந்தி வர
கலைக்கோர் விளக்கம் கிடைக்கும்
நான் வாழும் மணிமாடம்
ஆனந்த கலைக்கூடம் ஓயாத சந்தோஷமே
வான் வாழும் தேவர்க்கும் வாய்க்காது எந்நாளும்
நான் காணும் சௌபாக்கியமே
சங்கீதம் என் நிம்மதி
சப்தஸ்வரம் தானே என் சன்னிதி