Sanmaargamae Illaa |
---|
சன்மார்க்கமே இல்லா
சமூகப் பேயின் சதியாலே
என் போலும் பேதை எத்தனை
பேருள்ளாரோ புவிமேலே
சன்மார்க்கமே இல்லா
சமூகப் பேயின் சதியாலே
என் போலும் பேதை எத்தனை
பேருள்ளாரோ புவிமேலே
என் வாழ்க்கைத் துணையாம்
நாதன் இறந்தார் அது என் குற்றமா
கண்ணே இல்லாத மூடக் கயவர்
செய்த சதியாலே
பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேய்ச் சமூகம் நடுவே நான்
மாங்கல்யம் குங்குமம் மலர்
யாவும் இழந்தே
மாறியதோ மன உணர்ச்சியும்
உயிரும் தானே உயிரும் தானே