Santhana Kaatril |
---|
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண்பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண்பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே
வானத்து மேலே மேகப் பறவை
ஊர்வலம் போகின்றது
வருகின்ற மேகம் சூரியன் முகத்தில்
ஓவியம் வரைகின்றது
மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்கு
தூக்கம் கலைகிறது
ஓஓ மூளை முடுக்கில் ஓலை இடுக்கில்
சூரியன் நுழைகிறது
மண்ணிலெல்லாம் ஓஓ பொன்னோளியே ஓஓ
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண்பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே
ஆயிரம் கோடி ஆசைகள் சுமந்து
நான் இங்கே வந்தேனே
வாவென்று என்னை பூக்களின் கூட்டம்
வாழ்த்திடக் கண்டேனே
நாட்டை உயர்த்தி நாமும் உயர
சேவைகள் செய்வோமே
ஓஓ நாளையப் பொழுது நமக்கென விடியும்
நம்பிக்கை கொள்வோமே
பிள்ளைகளே ஓஓ முல்லைகளே ஓஓ
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே
வெண்பனி தூவ புன்னகையோடு
பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே
சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்
ஆடுது நாட்டியமே