Santhana Nilavoli

Santhana Nilavoli Song Lyrics In English


பாடலாசிரியர் : வைரமுத்து

ககரி சநிதம ககம கரிசநி ககரி சநிதநி சா சசகக சசமம சசதத சசநிநி சகம கமத மதநி தநிச தநிசக சகமப மபசநி சநிதநிசநிதப கமத மதநி சநிசக

சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம் இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும் சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள் மடியில் கனியாய் விழுந்தது

சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே

நீ ஒரு பிருந்தாவனம் தெய்வீக ராக மன்றமே நீ ஒரு பிருந்தாவனம் தெய்வீக ராக மன்றமே

நாள்தோறும் புன்னகைக்கும் பூங்காவனம் பூ தூவி நான் வணங்கும் தெய்வ குணம்

பசியின் மடியில் அமுதசுரபி கசியும் விழிகள் நினைவில் உருகி கருணை நிறைந்த இதயமே கடவுள் உனது வடிவமே

சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம் இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும் சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள் மடியில் கனியா விழுந்தது


சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே

தென்றலாய் என் வீட்டிலே வந்தாயே தாயே தெய்வமே தென்றலாய் என் வீட்டிலே வந்தாயே தாயே தெய்வமே

லட்சுமியே வந்து என்னை சீராட்டினாள் சந்தோஷ தொட்டிலிட்டு தாலாட்டினாள்

இதயம் முழுதும் உலவும் நிலவே உனது வருகை வெய்யிலின் நிலவே கருணை நதியாய் நடந்தவள் கவிதை வரியாய் நிறைந்தவள்

சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம் இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும் சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள் மடியில் கனியா விழுந்தது

சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே