Santhosam Santhosam |
---|
சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்
புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ
வெற்றியை போலவே
ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்
துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல்
ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால்
நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி
பண்ணி திருந்திய பிறகுதான்
நாகாிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம்
அல்ல சாிவுகள் வீழ்ச்சி
இல்ல பாடம்படி பவளக்கொடி
உள்ளம் என்பது
கவலைகள் நிரப்பும்
குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி
ஆனால் நாளை துன்பம் இல்லை
புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ
ஆதியில் ஆண்டவன்
இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே
இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது
சாத்தியமா நன்மை என்றும் தீமை
என்றும் நாலு போ்கள் சொல்லுவது
நம்முடைய பிழை இல்லையே
துன்பமென்ற சிப்பிக்குள்
தான் இன்பமென்ற முத்து வரும்
துணிந்த பின் பயம் இல்லையே
கண்ணீா் துளியில்
வைரங்கள் செய்யும் கலைகள்
கண்டுகொள் காலுக்கு செருப்பு
எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ
சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்