Santhosham Kaanaadha Female |
---|
ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆ
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆ
ஊருக்கு சிந்தும் வான் மழை தன்னில் உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால் நாளைகள் இன்றே வருவதுண்டு
பகல் வந்தபோது வெளிச்சம் உண்டு இருள் வந்தபோது விளக்கு உண்டு எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
கல்லினில் வாழும் தேரையும் கூட கண்களில் நீரை வடிக்கவில்லை காட்டினில் வாழும் மான்களுக்கெல்லாம் நாளையை எண்ணி நடுக்கமில்லை
ஐந்தறிவெல்லாம் களிப்பதென்ன ஆறறிவெல்லாம் துடிப்பதென்ன மதிக் கொண்டதாலே மயக்கமென்ன
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா