Sathi Malli Poocharame

Sathi Malli Poocharame Song Lyrics In English


சாதிமல்லிப் பூச்சரமே
சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும்
ஒன்றுதான்
கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னை போல் எல்லோருமென எண்ணோணும்
அதில் இன்பத்தைத் தேடோணும்

சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது
சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது
கண்மணி
யாதும் ஊரென யாரு சொன்னது
சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது
கண்மணி


படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கதான்
கேட்டுக்கோ ராசாத்தி
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதிமல்லிப் பூச்சரமே
சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி