Sattena Thooralum

Sattena Thooralum Song Lyrics In English


சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

அடி காதல்
வந்த பின்னாலே இரு
கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போலே நான்
துள்ள என் இதயம் ஆனது
தவுடுபொடி

சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

இதயம் என்பது
எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே
உன்னால் தான் எதையும்
உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்

நிழல் மட்டும்
தொடர்ந்து வந்த நிலமை
மாறி போனதே நிஜம் உன்னை
நெருங்கி நிற்க வயது கோலம்
போடுதே

இப்படியும் நான்
ஆவேனா மொத்தமும்
மாறி போவேனா கற்பனையும்
நான் செய்வேனா கண்டபடி
பொய் சொல்வேனா

யாரை கேட்க
கைகள் கோர்க்க நீ
இல்லாமல் வாழ்வேனா

சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

உனது புன்னகை
உரசி செல்கையில்
உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள்
தொட்டதும் நிகழுகின்றதே
மாயங்கள்


எதை கண்டும்
பயந்ததில்லை இதற்கு
முன்பு நானுமே உனை
கண்டு பதட்டம் ஒன்று
வருவதென்ன நாளுமே

எத்தனை பெண்கள்
நின்றாலும் என் விழி உன்னை
தேடுதடி தந்தது போதும் என்றாலும்
இன்னமும் காதல் கேட்குதடி

அடியே எந்தன்
ஆயுள் ரேகை உந்தன்
கைகளில் ஓடுதடி

சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

அடி காதல்
வந்த பின்னாலே இரு
கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போலே நான்
துள்ள என் இதயம் ஆனது
தவுடுபொடி

விசிலிங் :