Seemaiyellam

Seemaiyellam Song Lyrics In English


ஆண் தாம்தனதன தாம்தனதன
தந்தா தந்தா தந்தா தந்தா
பெண் தாம்தனதன தாம்தனதன
தந்தா தந்தா தந்தா தந்தா
ஆண் தந்தானானா
பெண் தந்தானானா
ஆண் தந்தான
பெண் தந்தான
தந்தானானா

சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
அட சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

ஏழைக்கொரு அண்ணன் தான்
எங்களுக்கு மன்னன் தான்
வாரித் தரும் எண்ணம்தான்
வாழ வைக்கும் உள்ளம்தான்
ஒழச்சு ஒசந்த உத்தமனே
ஒறவ மதிக்கும் நல்லவனே

ஆண் ஒழச்சு ஒசந்த உத்தமனே
பெண் ஒறவ மதிக்கும் நல்லவனே

ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா



ஹேய் நல்லாருக்கும் பொல்லாருக்கும்
நாடெங்கும் உள்ளாருக்கும்
இல்லாருக்கும் எல்லாருக்கும்
இனி மேலே நல்லாருக்கும்

கண்ணீரில் வாடும் ஏழைகள் காணும்
கஷ்டங்கள் தொடராது
கை கொண்டு ஒழச்சா மேல மேலே
நீ போவ தவறாது


சத்திய சோதன யாருக்கும் உண்டு
நிச்சயம் முடிவில் ஜெயம் உண்டு
புத்தனும் காந்தியும் சொன்னதக் கேட்டு
எடுத்துப் பாடுறேன் ஒரு பாட்டு
முன்னேறு நீ தானே ஹொய்
நான் கூட வருவேனே பாரு

ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்
சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

எட்டாதது கிட்டாதது
எப்போதும் ஏதும் இல்ல
இஷ்டப்பட்டு எட்டு வெச்சா
கிட்டாமப் போவதில்ல
உள்ளத்தில் இருக்கும்
எண்ணத்தப் போல
உனக்கொரு வாழ்வு வரும்

எல்லார்க்கும் எழுதுன
எழுத்துக போல
தப்பாம நடந்து விடும்
நெனச்ச மாதிரி எனக்கொரு வாழ்வு
நெருங்கி வந்தது இப்போது

சிரிச்ச மலர்கள சேர்த்தொரு மால
சூடிப் பாக்கணும் தப்பாது
சந்தோஷம் இனி மேல ஹொய்
துன்பங்கள் பனி போல ஓடும்

ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்
சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா