Seemaiyellam |
---|
ஆண் தாம்தனதன தாம்தனதன
தந்தா தந்தா தந்தா தந்தா
பெண் தாம்தனதன தாம்தனதன
தந்தா தந்தா தந்தா தந்தா
ஆண் தந்தானானா
பெண் தந்தானானா
ஆண் தந்தான
பெண் தந்தான
தந்தானானா
சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
அட சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா
ஏழைக்கொரு அண்ணன் தான்
எங்களுக்கு மன்னன் தான்
வாரித் தரும் எண்ணம்தான்
வாழ வைக்கும் உள்ளம்தான்
ஒழச்சு ஒசந்த உத்தமனே
ஒறவ மதிக்கும் நல்லவனே
ஆண் ஒழச்சு ஒசந்த உத்தமனே
பெண் ஒறவ மதிக்கும் நல்லவனே
ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா
ஹேய் நல்லாருக்கும் பொல்லாருக்கும்
நாடெங்கும் உள்ளாருக்கும்
இல்லாருக்கும் எல்லாருக்கும்
இனி மேலே நல்லாருக்கும்
கண்ணீரில் வாடும் ஏழைகள் காணும்
கஷ்டங்கள் தொடராது
கை கொண்டு ஒழச்சா மேல மேலே
நீ போவ தவறாது
சத்திய சோதன யாருக்கும் உண்டு
நிச்சயம் முடிவில் ஜெயம் உண்டு
புத்தனும் காந்தியும் சொன்னதக் கேட்டு
எடுத்துப் பாடுறேன் ஒரு பாட்டு
முன்னேறு நீ தானே ஹொய்
நான் கூட வருவேனே பாரு
ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்
சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா
எட்டாதது கிட்டாதது
எப்போதும் ஏதும் இல்ல
இஷ்டப்பட்டு எட்டு வெச்சா
கிட்டாமப் போவதில்ல
உள்ளத்தில் இருக்கும்
எண்ணத்தப் போல
உனக்கொரு வாழ்வு வரும்
எல்லார்க்கும் எழுதுன
எழுத்துக போல
தப்பாம நடந்து விடும்
நெனச்ச மாதிரி எனக்கொரு வாழ்வு
நெருங்கி வந்தது இப்போது
சிரிச்ச மலர்கள சேர்த்தொரு மால
சூடிப் பாக்கணும் தப்பாது
சந்தோஷம் இனி மேல ஹொய்
துன்பங்கள் பனி போல ஓடும்
ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்
சேரி எல்லாம் உன்னுடைய
பேர வெச்சு பாடுமையா ராசா ராசா