Seetha Seetha |
---|
சீதாஆஆஆசீதாஆஆஆ
சீதாஆஆஆசீதாஆஆஆ
என்றே சிந்தை நொந்தான் ஸ்ரீராமச்சந்திரன்
சீதையை ராவணன் சிறை எடுத்தான்
என ஓதிய ஜடாயு உயிர் விடுத்தான்
மோதிய துயருடன் தகனம் செய்தே
நீதியின் உருவம் வழி நடந்தான்
மலையரசன் வாலி ஆட்சியிலே துன்ப
நிலையை அடைந்தான் தம்பி சுக்ரீவன்
வலி மிகுந்த நண்பன் அனுமனுடன்
ராமலட்சுமணரை கண்டு அமைதிக் கொண்டான்
ராமலட்சுமணனை கண்டு அமைதிக் கொண்டான்
இஷ்டமுடன் மராமரங்களை துளைத்தே
இமயமாம் வாலியை நொடிதனில் வதைத்தே
இமயமாம் வாலியை நொடிதனில் வதைத்தே
கிஷ்கிந்தையை சுக்ரீவனுக்களித்தே
கிளி மொழி சீதையை எண்ணினான் மனத்தே
அன்னையை தேடிட பல எண்ணிலா
வீரர்கள் பறந்தனரே
அன்பெனும் கணையாழியை ராமனும் அளித்திட
பாய்ந்தான் அனுமான்
ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஹரி ஹரி ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஹரி ஹரி ராம் ராம் ராம் சீதாராம்