Sembaruthi Poovu |
---|
செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே
செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே
குப்பத்திலே வாழும்
குண்டுமணி பாரு
கொத்துமலர் சூடும்
முத்துமணி தேரு
அழகை பார்த்தா
அசந்து போகணும்
அடடே அடடே அடடடே
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே
சீமைத்தோரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே
அக்கரையில் வாழும்
ஆணழகன் பாரு
இக்கரையில் ஈடாய்
இன்னொருவர் யாரு
அழகை பார்த்தா
அசந்து போகணும்
அடடே அடடே அடடடே
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே
கை வலையில்
மாட்றுகின்ற
உப்புக்கடல் மீனு
கண் வலையில் வாங்கி வந்த
கன்னி இள மானு
கட்டுமரம் ஏறுகின்ற
மீனவரின் சாதி
கண்டெடுத்த பெண்ணரசி
வெண்ணிலவின் சோதி
எங்க மகாராணி இளமேனி
ஒரு மாங்கனி
சின்ன இடை ஆடி இசைப்பாடி
வரும் பூங்கொடி
யார் தான் இங்கு ஈடு
இவை கொம்புத்தேனின் கூடு
உடல் வனப்பும் தளதளப்பும்
அழகு சுரங்கம் தான்
ஹேய்
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே
செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே
எட்டடுக்கு மாளிகையில்
வாழுகிற ஆளு
சொத்து சுகம் கோடி உண்டு
அக்கம் பக்கம் கேளு
பட்டணத்து பாட்டியமா
பெத்தெடுத்த பேரன்
முக்கடலில் மூச்சடக்கி
முத்தெடுக்கும் வீரன்
மண்டி இடும் பாரு
இந்த ஊரு
மகராசன் தான்
மன்மதனும் கூட
புகழ் பாட
இவன் தாசன் தான்
யாரும் ஈடு இல்ல
இவன் எங்க வீட்டு பிள்ளை
இவன் உருவம் இளம்பருவம்
ஒருத்தி அணைக்க தான்
செம்பருத்தி பூவு
பெண்ணொருத்தி போலே
சேலை கட்டி ஆடட்டுமே
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
மாலை கட்டி போடட்டுமே
ஒன்னும் ஒன்னும் சேந்து
ஒத்துமையா வாழ
இல்லறத்தில் நாளும்
நல்லறங்கள் சூழ
மேளம் தாளம் முழங்க போகுது
ஊரே வாழ்த்தை
வழங்க போகுது
செம்பருத்தி பூவு
பெண்ணொருத்தி போலே
சேலை கட்டி ஆடட்டுமே
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
மாலை கட்டி போடட்டுமே