Sendhamizh Naattu Solaiyile |
---|
ஆஅஆஅஆஆஅஆஅஆ
செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
சிந்து பாடித் திரியும் பூங்குயிலே
செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
சிந்து பாடித் திரியும் பூங்குயிலே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே
சிந்தை கவர்ந்த ஆண் அழகா
உம்மால் எனது வாழ்விலே
சிந்தை கவர்ந்த ஆண் அழகா
உம்மால் எனது வாழ்விலே
சொந்தம் மிகுந்தது
காதலில் புது சுகமும்
என் மனம் காணுதே
சொந்தம் மிகுந்தது
காதலில் புது சுகமும்
என் மனம் காணுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே இந்த வேளையிலே
அன்பில் விளைந்த அமுதே
என் ஆசைக் கனவும் நீயேஏஏ
அன்பில் விளைந்த அமுதே
என் ஆசைக் கனவும் நீயே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே
ஆஅஆஅஆஆஆஆஅ
உம்மை இன்றி இங்கு இன்பமில்லை
உற்ற துணை வேறு யாருமில்லை
உம்மை இன்றி இங்கு இன்பமில்லை
உற்ற துணை வேறு யாருமில்லை
என்னுயிரே தமிழ்க் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்
என்னுயிரே தமிழ்க் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்
இன்பம் துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே நாமே
இன்பம் துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே நாமே
இல்லறம் ஏற்று பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம்
இல்லறம் ஏற்று பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம்
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே
இருவர் : எண்ணி எண்ணி இந்த
ஏழையின் மனம்
இன்பக் கனவு காணுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே (தேன்மொழியே) இந்த வேளையிலே