Sendhamizh Naattu Solaiyile

Sendhamizh Naattu Solaiyile Song Lyrics In English


ஆஅஆஅஆஆஅஆஅஆ

செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
சிந்து பாடித் திரியும் பூங்குயிலே
செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
சிந்து பாடித் திரியும் பூங்குயிலே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

சிந்தை கவர்ந்த ஆண் அழகா
உம்மால் எனது வாழ்விலே
சிந்தை கவர்ந்த ஆண் அழகா
உம்மால் எனது வாழ்விலே
சொந்தம் மிகுந்தது
காதலில் புது சுகமும்
என் மனம் காணுதே
சொந்தம் மிகுந்தது
காதலில் புது சுகமும்
என் மனம் காணுதே

தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே இந்த வேளையிலே

அன்பில் விளைந்த அமுதே
என் ஆசைக் கனவும் நீயேஏஏ
அன்பில் விளைந்த அமுதே
என் ஆசைக் கனவும் நீயே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே

தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே


ஆஅஆஅஆஆஆஆஅ

உம்மை இன்றி இங்கு இன்பமில்லை
உற்ற துணை வேறு யாருமில்லை
உம்மை இன்றி இங்கு இன்பமில்லை
உற்ற துணை வேறு யாருமில்லை
என்னுயிரே தமிழ்க் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்
என்னுயிரே தமிழ்க் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்

இன்பம் துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே நாமே
இன்பம் துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே நாமே
இல்லறம் ஏற்று பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம்
இல்லறம் ஏற்று பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம்

தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

இருவர் : எண்ணி எண்ணி இந்த
ஏழையின் மனம்
இன்பக் கனவு காணுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே (தேன்மொழியே) இந்த வேளையிலே