Sengaade |
---|
ஹோ ஹோ ஹோ ஓஹோ
ஹோ செங்காடே
சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே
கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு
போகிற பொணங்க போல
சன சன சனங்கலெல்லாம்
போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி
இரை தேடுதே ஓஒ
பசியோட மனுச
கூட்டம் வெளியேருதே
பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஹோ செங்காடே
சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே
கல்லிகளே போய் வரவா
வெளையாத காட்ட விட்டு
வெளையான்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெகுளி
ஜனம் வெளியேருதே ஓ
வாழ்வோடு கொண்டுவிடுமோ
சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி நீளுதே
உயிரோடு வாழ்வது
கூட சிறு துன்பமே ஹோ
வயிரோடு வாழ்வது தானே
பெரும் துன்பமே
பெல்லாத விதியும் அழைக்க
போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார்
வாழ்வதோ யார் கண்டது
பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே
பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே
கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான்
பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும்
பசிய தீக்கவும் பச்ச பூமிய காமி
ஹோ செங்காடே சிறுகரடே
போய் வரவா
ஹோ காடுகளே
கல்லிகளே போய் வரவா
ஓஓஓஒ
காலோடு சரல கிழிக்க
கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே
ஊர் போகுதே
கருவேலங்காடு கடந்து
கல்லூத்து மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர்
சேருமா வழி இல்லையே
கங்கானி பேச்ச நம்பி
சனம் போகுதே ஓ
நண்டுகள கூட்டிக் கொண்டு
நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக
ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீளுமோ உடல்
மீளுமோ யார் கண்டது
பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஹோ செங்காடே சிறுகரடே
போய் வரவா
ஹோ காடுகளே
கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு
போகிற பொணங்க போல
சன சன சனங்கலெல்லாம்
போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி
இரை தேடுதே ஓ
பசியோட மனுச
கூட்டம் வெளியேருதே
ஓஓஒ ஓஓஒ
பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஓ ஓஓ