Senjanthu |
---|
செஞ்சாந்துக் குழம்பாலே
மயில் தோகை இறகாலே
செங்காந்தள் விரல் மீது தோழி
அழகாக நலங்கிட்டு
அமர்ந்தாளே இளஞ்சிட்டு
கல்யாணத் திருக்கோலம் வாழி
அழகான மணவாளன்
அவன் கூட நெடுங்காலம்
நிழலாக நடை போடும் நீயே
ஆண்டொன்று தவறாமல்
அடிபாரம் குறையாமல்
பல செல்வம் பெறப்போகும் தாயே
இந்நாளில் வளைகாப்பு
எல்லோர்க்கும் வரவேற்பு
ஏழாச்சு சூல் கொண்ட மாசம்
பொன்னான கை கொண்டு
பொழுதோடு தாலாட்ட
ஒரு பிள்ளை வரப்போகும் நேரம்