Senjanthu

Senjanthu Song Lyrics In English


செஞ்சாந்துக் குழம்பாலே
மயில் தோகை இறகாலே
செங்காந்தள் விரல் மீது தோழி

அழகாக நலங்கிட்டு
அமர்ந்தாளே இளஞ்சிட்டு
கல்யாணத் திருக்கோலம் வாழி

அழகான மணவாளன்
அவன் கூட நெடுங்காலம்
நிழலாக நடை போடும் நீயே

ஆண்டொன்று தவறாமல்
அடிபாரம் குறையாமல்
பல செல்வம் பெறப்போகும் தாயே


இந்நாளில் வளைகாப்பு
எல்லோர்க்கும் வரவேற்பு
ஏழாச்சு சூல் கொண்ட மாசம்

பொன்னான கை கொண்டு
பொழுதோடு தாலாட்ட
ஒரு பிள்ளை வரப்போகும் நேரம்