Senthamizh Naadennum |
---|
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
பெண் செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
பெண் எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருணை நதி
ஆஆஅஆஆஆஆஆ
பெண் காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருணை நதி
என மேவிய ஆறு பலவோடத்
திரு மேனி செழித்த தமிழ்நாடு
பெண் என மேவிய ஆறு பலவோடத்
திரு மேனி செழித்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
பெண் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ்நாடு
பெண் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ்நாடு
நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை
ஆஆஅஆஆஆஆஆ
பெண் நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை
வட மாலவன் குன்றம்
இவற்றிடையே
புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
அனைவரும் : செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
கைதட்டல்கள் :
அனைவரும் : செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே