Senthamizh Paadum |
---|
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
தென் மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
பறவைகளின் ஒலியமுதம்
பருவ மகள் இசை அமுதம்
பாராட்ட நீராடினாள்
தாலாட்ட உனைத் தேடினாள்
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணா கண்ணா
தேரினில் வந்தது கண்ணா
கல்யாண மன்றங்கள்
கண் காட்சி கண்டேன்
நம் வாழ்வில் என்னாளடி
நல் வாக்கு சொல்வாயடி
அருகில் வரும் தரும துரை
உறவு தரும் புதிய கலை
ஆனந்தம் அந்நாளிலே என் மேனி உன் அன்பிலே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
செவ்வந்திப் பூ மீது
வெண் நீல வண்டு
ஜில்லென்று நீராடுது
சிந்தாமல் தேனூறுது
பதுமையுடன் புதுமை மது
பசி அறியும் இளமை நதி
பாலூட்ட நீயில்லையாஆஆஆ
சீராட்ட நானில்லையா
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
கண்ணா தேரினில் வந்தது கண்ணா