Senthazham Poovil

Senthazham Poovil Song Lyrics In English


ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து
போகும்பாதை மங்கை மோக
கூந்தலோ மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம் பருவ
நாண ஊடலோ

ஆலங்கொடி மேலே
கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது காடுகள்
மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்


பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம்
மலையில் வந்தால் ஏகம்
சொர்க்க சிந்தனை இதழை
வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ண்தனை

ஓடை தரும்
வாடை காற்று வான்
உலகை காட்டுது உள்ளே
வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன்
அற்புத காட்சி

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்