Seyyum Thozhile Deivam |
---|
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்
கையும் காலும்தான் உதவி கொண்ட
கடமைத்தான் நமக்கு பதவி
கையும் காலும்தான் உதவி கொண்ட
கடமைத்தான் நமக்கு பதவி
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்
பயிரை வளர்த்தால் பலனாகும்
அது உயிரைக் காக்கும் உணவாகும
வெயிலே நமக்கு துணையாகும்
இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலை உண்டு குல மானம் உண்டு
வருங்காலம் உண்டு அதை நம்பிடுவோம்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்
சாமிக்கு தெரியும் பூமிக்கு தெரியும்
ஏழைகள் நிலைமை
அந்த சாமி மறந்தாலும் பூமி தந்திடும் தகுந்த பலனை
இதைப் பாடி பாடி விளையாடி
ஆடிப்பல கோடி கோடி முறை கும்பிடுவோம்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்
காயும் ஒருநாள் கனியாகும்
நம் கனவும் ஒருநாள் நினைவாகும்
ஆஅஆஅஆஆஅஆ
ஆஅஆஅஆஆஆஅ
காயும் கனியும் விலையாகும்
நம் கனவும் நினைவும் நிலையாகும்
உடல் வாடினாலும் பசி மீறினாலும்
வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்
கையும் காலும்தான் உதவி கொண்ட
கடமைத்தான் நமக்கு பதவி
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்