Silaiyodu Vilaiyaada |
---|
சிலையோடு விளையாட வா
சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண
சிலையோடு விளையாட வா
சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண
தளிர் போலும் முகம் வேண்டுமா
இல்லை மலர் போலும் விழி போதுமா
தளிர் போலும் முகம் வேண்டுமா
இல்லை மலர் போலும் விழி போதுமா
மாறாத சுகம் வேண்டுமா
உன்னை மறவாத மனம் போதுமா
மாறாத சுகம் வேண்டுமா
உன்னை மறவாத மனம் போதுமா
வண்ண மயிலோடு விளையாடும்
முகில் போல வா
வண்ண மயிலோடு விளையாடும்
முகில் போல வா
அன்பு மழையோடு வா
காதல் கடலாட வா
தங்க சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண
சிலையோடு விளையாட வா
காலையில் அரும்பாகி
அந்தியில் மலராகி
காதலில் உருவானதால்
காலையில் அரும்பாகி
அந்தியில் மலராகி
காதலில் உருவானதால்
தனிமையும் தாளாமல்
துணைவரைக் காணாமல்
நூல் போல நெளிந்தாடும்
இடையைப் பார்
சொந்தம் தானாக
குழைந்தாடும் நடையைப் பார்
மின்னல் அலை போல அசைந்தாடும்
உடையைப் பார்
மதி மயக்கம் மிகும் உறக்கம் தரும்
வித்தை பழகாத கிளியோடு சுகம் காண வா
இன்ப சிலையோடு விளையாட வா
சென்ற பின் திரும்பாது
தேடினும் கிடைக்காது
தென்றலில் உருவான பெண்மை
சென்ற பின் திரும்பாது
தேடினும் கிடைக்காது
தென்றலில் உருவான பெண்மை
இங்கு நான் என்றும்
நீ என்றும் என்னைத் தேடி
வந்து நடமாடும்
ஆண் மக்கள் பல கோடி
வந்து நடமாடும்
ஆண் மக்கள் பல கோடி
எந்தன் உள்ளம் உங்கள் சொந்தம்
எந்தன் உள்ளம் உங்கள் சொந்தம்
மனம் சிந்தாமல் சிதறாமல்
தேன் போலும் கதை காண
சிலையோடு விளையாட வா