Silaiyodu Vilaiyaada

Silaiyodu Vilaiyaada Song Lyrics In English


சிலையோடு விளையாட வா
சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண

சிலையோடு விளையாட வா
சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண

தளிர் போலும் முகம் வேண்டுமா
இல்லை மலர் போலும் விழி போதுமா
தளிர் போலும் முகம் வேண்டுமா
இல்லை மலர் போலும் விழி போதுமா
மாறாத சுகம் வேண்டுமா
உன்னை மறவாத மனம் போதுமா
மாறாத சுகம் வேண்டுமா
உன்னை மறவாத மனம் போதுமா

வண்ண மயிலோடு விளையாடும்
முகில் போல வா
வண்ண மயிலோடு விளையாடும்
முகில் போல வா
அன்பு மழையோடு வா
காதல் கடலாட வா

தங்க சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண
சிலையோடு விளையாட வா

காலையில் அரும்பாகி
அந்தியில் மலராகி
காதலில் உருவானதால்
காலையில் அரும்பாகி
அந்தியில் மலராகி
காதலில் உருவானதால்


தனிமையும் தாளாமல்
துணைவரைக் காணாமல்
நூல் போல நெளிந்தாடும்
இடையைப் பார்
சொந்தம் தானாக
குழைந்தாடும் நடையைப் பார்
மின்னல் அலை போல அசைந்தாடும்
உடையைப் பார்
மதி மயக்கம் மிகும் உறக்கம் தரும்
வித்தை பழகாத கிளியோடு சுகம் காண வா

இன்ப சிலையோடு விளையாட வா

சென்ற பின் திரும்பாது
தேடினும் கிடைக்காது
தென்றலில் உருவான பெண்மை
சென்ற பின் திரும்பாது
தேடினும் கிடைக்காது
தென்றலில் உருவான பெண்மை

இங்கு நான் என்றும்
நீ என்றும் என்னைத் தேடி
வந்து நடமாடும்
ஆண் மக்கள் பல கோடி
வந்து நடமாடும்
ஆண் மக்கள் பல கோடி

எந்தன் உள்ளம் உங்கள் சொந்தம்
எந்தன் உள்ளம் உங்கள் சொந்தம்
மனம் சிந்தாமல் சிதறாமல்
தேன் போலும் கதை காண
சிலையோடு விளையாட வா