Sillendru Varum Kaatru

Sillendru Varum Kaatru Song Lyrics In English


சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

அம்மம்மா அதே
காற்று என்னை எங்கெங்கோ
தொடுகின்றது

என்னை ஆடையாய்
நீ சூடிடு உந்தன் கூந்தல்
பாகம் மூடிடு

இந்த ஏகாந்த
நேரத்தில் ஏதேதோ
ஆசைகளோ

ஹ்ம்ம்ம் ம்ம்ம்

சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

வண்டென என் மனம்
வந்து இந்த ஊதா பூவை ஊதும்
தேன் ஏந்தும் தங்க பாத்திரம்
மேல் வந்து நின்ற மாத்திரம்

விட்டது தொட்டது
போக கொஞ்சம் வைத்தால்
என்ன மீதம் அன்புக்கு உண்டு
சாத்திரம் ஆகாது இந்த ஆத்திரம்

கண்ணே நீ ஓர்
சித்திரம் என் கையில்
என்றும் பத்திரம்

அன்பே நீ ஓர்
மந்திரம் நான் ஆனேன்
உன்னால் எந்திரம்

ஒவ்வொரு நாளும்
நீயாட பூ மஞ்சம் நான்
போடவா

ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்


முக்கனி சக்கரை
சேர அது பாதாம் பாலில்
ஊற தித்திக்கும் வேளை
அல்லவா வெட்கத்தை
போக சொல்லவா

கற்பனை செய்திடும்
கம்பன் உன்னை கண்டால்
தோற்று போவான் சொல்லாலே
வித்தை செய்கிறாய் உள் அர்த்தம்
வைத்து சொல்கிறாய்

பெண்மை என்னும்
ஜாதியில் அவள் பேசும்
பேச்சும் ஜாடையில்

ஜாடை செய்தால்
போதுமே கை ஜாதி பூவை
கிள்ளுமே

கிள்ளிடும் நேரம்
கூச்சங்கள் தாளாமல்
நான் துள்ளவா

ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

அம்மம்மா அதே
காற்று என்னை எங்கெங்கோ
தொடுகின்றது

என்னை ஆடையாய்
நீ சூடிடு உந்தன் கூந்தல்
பாகம் மூடிடு

இந்த ஏகாந்த
நேரத்தில் ஏதேதோ
ஆசைகளோ

ஆஹா ஹா