Sinagarama Nalla |
---|
ஹேய் தந்தானனா
தந்தானத் தந்தானத் தந்தானத் தந்தன்னா
ஹேய் தந்தானனா தந்தானத் தானா
தந்தானத் தானா தானா
சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம்
வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே
நாடெல்லாம் யார் வழி நீ போகும் நேர் வழி
முன்னாலே அடியெடுத்தா நீ தான்
பின்னாலே திரும்பாதே
சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
தாவி ஆடும் பிள்ளைக்கு
தாகம் தீர்க்கும் அன்னையே
ஓஓஓ
ஆடி தவித்த பிள்ளைக்கு
அன்னம் கொடுக்கும் பூமியே
ஓஓஓ
தங்கம் வெள்ளி வைரம் போல்
மண்ணில் செல்வம் பாரடி
முத்து மணி பவழம் போல்
தந்தாள் அவள் யாரடி
மண்ணில் உள்ள பெருமை கூறிட
ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்லிட
சொல்லாமல் சீர் கொடுப்பாள்
அவள்தான் மண்ணென்னும் தாயம்மா
சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம்
வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே
தா தந்தனன தந்தனன
னானானா தந்தனன னானானா
பெண்ணும் இந்த மண்ணும் ஒண்ணு
பொறுமையில் ரெண்டும் ஒன்னில் ஒன்னு
ஓஓஓ
அன்பு தந்து தன்னைத் தந்து
காத்து நிற்பாள் கண்ணே கண்ணு
ஓஓஓ
மண்ணில் வந்த உயிரெல்லாம்
அம்மா அவள் பிள்ளைகள்
பண்பால் பல வடிவங்கள்
எல்லாம் அவள் செல்வங்கள்
கோணல் புத்தி கொண்ட பேரையும்
குழந்தை என்றே கூறி அணைப்பாள்
சொல்லாமல் சீர் கொடுப்பாள்
அவள்தான் மண்ணென்னும் தாயம்மா
சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம்
வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே
நாடெல்லாம் யார் வழி நீ போகும் நேர் வழி
முன்னாலே அடியெடுத்தா நீ தான்
பின்னாலே திரும்பாதே
சிங்காரமா நல்ல ஒய்யாரமா
ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம்
வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே