Sindhu Nathiyoram |
---|
பாடகர்கள் : பி சுசீலா மற்றும் பி ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்
சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்
இருவர் : சிந்து நதியோரம்
கன்னி இள மயில் சின்ன மணிக்குயில் என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது கையிரெண்டில் அள்ளி காதல் கதை சொல்லி உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது
நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன் வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன் இன்னும் எதற்கிந்த பார்வையோ என்ன தேவையோஎன்ன தேவையோஹோ
சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்
சிந்து நதியோரம்
சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறேது
மங்கை அழகி மலையருவி பொங்கி பெருகிடும் என் மனம் கங்கை நதிக்கென்ன தாகமோ என்ன வேகமோ தன்னை மீறும்மோஹோ
சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்
இருவர் : சிந்து நதியோரம்