Siragillai |
---|
சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடுதேடு
சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா
சுவை காணவில்லையா
ஆறாம் அறிவு கொண்டோம்
அது ஒன்றே தொல்லையா
எத்தனை கோடி இன்பம்
இந்த மண்ணில் இல்லையா
பெண் கண்ணில் இல்லையா
கானல் நீரில் துாண்டில்
நாம் போட்டோம் இல்லையா
வாழ்க்கையின் இன்பம்ம்ம்
நாட்களில் இல்லை
சில நாழிகை வாழும்
சிற்றீசல் கூட தீபங்கள் தேடும் தேடும்
சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடுதேடு
சூரியன் மேற்க்கில் வீழ்ந்த பின்னும்
வாழ்க்கை உள்ளது
அதை நிலவு சொன்னது
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது
தளிர் வந்து சொன்னது
தொட்டால் சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை
இன்றொரு வாழ்க்கை
எதுவாகிய போதும் நலமாயிரு போதும்
இதுவே என் வேதம்வேதம்
சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடுதேடு