Siricha Kolli Mala |
---|
சிரிச்சாகொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
ஒரு முத்துமணி தந்த மோகத்திலே
பத்து விரல் தொட்ட வேகத்திலே
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
பட்ட இடம் பாலூற
நெஞ்சுக்குள்ள பெண்மை சுரக்க
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
கல்லா கெடந்து பூவானா
ரெண்டாம் தடவ ஆளானா
கல்லா கெடந்து பூவானா
ரெண்டாம் தடவ ஆளானா
கரும்பாறைய போலிருந்தா
சொக மாம்பழமா கனிஞ்சா
ரோசா கதவு தானா தொறந்து
வாசம் வந்ததென்ன ஹோய்
ரோசா கதவு தானா தொறந்து
வாசம் வந்ததென்ன
இளம் பூவ கொடிதான் தொடுமோ
கனவோ நெனவோ
சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஓய்
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
காவலுக்கிங்கே யார் பொறுப்பு
முள்ளு வளர்த்தது தாமரப் பூ
காவலுக்கிங்கே யார் பொறுப்பு
முள்ளு வளர்த்தது தாமரப் பூ
ஒலகம் ஏங்குமோ மல்லிப் பூ
பறிபோனது என் சிரிப்பு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு ஹோய்
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு
தளும்பாதிருப்பேன் கொடமே
சொகமே வருமே
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
ஒரு முத்துமணி தந்த
மோகத்திலே
பத்து விரல் தொட்ட வேகத்திலே
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு