Sirithu Kondae Irukka Vendum |
---|
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து
ஆனந்தம் பெற வேண்டும்
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து
ஆனந்தம் பெற வேண்டும்
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
பொறுத்திருந்தால் காலம்
போய்விடக் கூடும் ஹான்
பொறுத்திருந்தால் காலம்
போய்விடக் கூடும்
இளமை பொழுது மறைந்து விட்டால்
சுகம் என்ன தோணும்
பொழுது மறைந்து விட்டால்
சுகம் என்ன தோணும்ஆஆஆஅஆ
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
அந்தி வந்தால் மனதினிலே
ஆசை வராதோ
பெண்ணை அள்ளி அணைக்கும்படி
இளமை சொல்லாதோ
ஆஆஆஹாஆஅஆஆஅஆ
அந்தி வந்தால் மனதினிலே
ஆசை வராதோ
பெண்ணை அள்ளி அணைக்கும்படி
இளமை சொல்லாதோ
பொழுது விடிவதென்றால் கோபம் வராதோ
பொழுது விடிவதென்றால் கோபம் வராதோ இந்த
பூமியை மறக்க நெஞ்சம் ஆவல் கொள்ளாதோ
சிரித்துக் கொண்டே
நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
இன்பத்தில் பிறந்ததுதான்
இந்த கலையும்
ஆண் பெண் இருவர் இல்லாவிடில்
ஏதிந்த உலகம்
இன்பத்தில் பிறந்ததுதான்
இந்த கலையும்
ஆண் பெண் இருவர் இல்லாவிடில்
ஏதிந்த உலகம்
எண்ணம் பொருந்தி விட்டால்
ஏற்படும் மயக்கம்
ஆஆஅஆஅஆஅஹாஆஅஆஆ
எண்ணம் பொருந்தி விட்டால் ஏற்படும் மயக்கம்
இன்பம் எத்தனை எத்தனையோ வேறென்ன விளக்கம்
சிரித்துக் கொண்டே
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
முன்னம் பிறந்தவர்கள்
யாரும் இன்றில்லை
அவர் முடித்த கதையை விட்டால்
வேறொன்றும் இல்லை
முன்னம் பிறந்தவர்கள்
யாரும் இன்றில்லை
அவர் முடித்த கதையை விட்டால்
வேறொன்றும் இல்லை
தன்னந்தனிமைதான் இருவரின் எல்லை
தன்னந்தனிமைதான் இருவரின் எல்லை
எண்ணம் தாவி கலந்து விட்டால்
துயரங்கள் ஏதும் இல்லை
சிரித்துக் கொண்டே நீங்கள்
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து
ஆனந்தம் பெற வேண்டும்
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்