Siru Malli Poove |
---|
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை
ஒரு ராஜ மாளிகை
அஆஆஅ
பல தேவ கன்னிகை
அஆஆஅ
நான் பார்க்காத சுகமல்லவாஆஹா
சிறு மல்லிப் பூவில்
கொடி முல்லைத் தேனில்
உனக்கு என் ஆராதனை
பொன் அந்தி வானம் வானம்
கண்ணே உன் கன்னம் கன்னம்
ஓஹோஓஹோ
பொன் அந்தி வானம் வானம்
கண்ணே உன் கன்னம் கன்னம்
உன் கண்கள் பார்க்க பார்க்க
மென்மேலும் மின்னும் மின்னும்
காதலில் தேவி நீ தொடும் போது
பூமழை தூறல் என் மனம் மீது
உனக்கென நானும்தான்
எனக்கென நீயும்தான்
இருவரும் கூடும் குளிர் காலம் இது ராஜா
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை
உள்ளத்தின் ஓசை
கண்ணாலே காட்டும் ஆசை
ஓஹோஓஹோ
உள்ளத்தின் ஓசை
கண்ணாலே காட்டும் ஆசை
சொல்லுக்கு வேலை ஏது
சுக வீணை மீட்டும் போது
ஆயிரம் ஆண்டு காதலர் போலே
வாழ்ந்திருப்போமே பூமியின் மேலே
மலர்களின் கோலம்தான்
மயங்கிடும் காலம்தான்
உலகங்கள் யாவும் சுகம் தேடி மகிழ்வோமே
சிறு மல்லிப் பூவில்
கொடி முல்லைத் தேனில்
உனக்கு என் ஆராதனை
ஒரு ராஜ மாளிகை
அஆஆஅ
பல தேவ கன்னிகை
அஆஆஅ
இது நான் தந்த வரமல்லவாஆஹா
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை