Siru Paarvayaale |
|---|
சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு
வந்த மல்லிப்பூவே
முல்லைத் தீவே
தும்பி ஆக மாறி
உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
விழியே ஓ கைபா
கைபா மடியே ஓ கைபா
கைபா
உதய்க்கும்
மலைகளிலே மிதக்கும்
படகெனவே மறைக்கும்
முகிலிடையே சிரிக்கும்
முழு நிலவே
அடக்கம்
தடுக்கிறதே அதட்டிப்
பிடிக்கிறதே நெருங்கி
வருகையிலே நொறுங்கி
உடைகிறதே
உன் நெஞ்சில்
இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டிப்
பார்க்கும் வாலாட்ட
நீ மண்ணில்
உள்ள பெண்ணே இல்லை
என்னைத் தேடி வந்தாய்
பாராட்ட
சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
சிலிர்க்கும்
இலைகளிலே துளிர்க்கும்
முதல் இலையே இனிக்கும்
கரும்பினிலே கிடைக்கும்
முதல் சுவையே
விழுந்தேன்
இரவினிலே எழுந்தேன்
கனவினிலே கனவில்
நீ இருந்தாய் மறந்தேன்
வெளிவரவே
ஒரு ஜோடி
தென்றல் போகுது
முன்னாலே அதை
கால்கள் என்று
பொய்கள் சொன்னாயே
நீ கொஞ்சும்
போது பல்லும் நஞ்சு
ஆனால்கூட அள்ளி
உண்பேனே
ஆஆஆஆ
சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு
வந்த மல்லிப்பூவே
முல்லைத் தீவே
தும்பி ஆக மாறி
உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
ஆஹா
ஆஹாஆஹா
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
