Siruvizhi Kurunagai

Siruvizhi Kurunagai Song Lyrics In English


சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
எழில் சிலை நகர் வடிவே
தேன் அலைக் கடலே
எண்ண எண்ண இன்பம் தரும்
வண்ண மலர் அமுதே

சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
உந்தன் சொல்லே ஓசை இசை தரும் வீணையே

ஆடிடும்போது
என் இதயமும் சேர்ந்தே
நில்லாமல் மகிழ்ந்தாடுமே
நீ ஆடிடும்போது
என் இதயமும் சேர்ந்தே
நில்லாமல் மகிழ்ந்தாடுமே

வேதனை நினைவுகள்
உன் முகம் கண்டால்
சொல்லாமலே பறந்தோடுமே
வேதனை நினைவுகள்
உன் முகம் கண்டால்
சொல்லாமலே பறந்தோடுமே
ஹோ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ

இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலேஏ
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலேஏ
மணியே தளிரே சிங்காரச் சேயே
மாறாத செல்வம் நீயே

சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே


நாடகம் போன்றே
நயமிகக் காண்பேன்
கை வீசியே வரும் போதிலே
நீ கை வீசியே வரும் போதிலே

வானகம் தவழ்ந்திடும்
தென்றலைக் காண்பேன்
என் ஜீவனே உன் மீதிலே
வானகம் தவழ்ந்திடும்
தென்றலைக் காண்பேன்
என் ஜீவனே உன் மீதிலே
ஹோ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ

இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலேஏ
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலேஏ
மணியே தளிரே சிங்காரச் சேயே
மாறாத செல்வம் நீயே

சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
உந்தன் சொல்லே ஓசை இசை தரும் வீணையே