Sithaadai Thaeney |
---|
சித்தாடைத் தேனே
செவ்வந்திப்பூ ராணி
கொத்தாடும் பூப்போல்
கட்டிக் கொள்ளவா
முத்தாரம் சூடும்
மன்னவரைத் தேடும்
அச்சாரம் போட்டு
ஒட்டிக் கொள்ளவா
தொட்டாலே போதும்
தூக்கங்கள் போகும்
தாலாட்ட நீயும் வந்து விடு
கட்டான தேகம் காணாத யோகம்
கண்ணாளா நீயும் சொல்லிக் கொடு
சித்தாடைத் தேனே
செவ்வந்திப்பூ ராணி
கொத்தாடும் பூப்போல்
கட்டிக் கொள்ளவா
ஆடிக் கொண்டு பாடிக் கொண்டு
உன்னை நித்தம் நித்தம்
சுத்துதிந்த அல்லித் தண்டு
போதை கொண்ட பூவைக் கண்டு
மனம் விட்டு விட்டு போவதென்ன
சில்லு வண்டு
கள்ளூறும் கன்னம்
கண்டு விட்ட பின்னும்
பாராமல் போனால் தாங்காது
வெள்ளோட்டம் பாரு வேதனையை தீரு
சேராமல் மேனி தூங்காது
ராக்கோழி கூவுகிற ராப்போது
ராஜாத்தி வாடுவதும் ஆகாது
மாராப்பு உன்னை வந்து சேராதா
வீராப்பை விட்டு விட்டால் ஆகாதா
பூங்குருவி தவிக்குது
பூஜைகளில் வரம் கொடு
வந்து விடு தந்து விடு
நித்தம் ஜஜம் ஜஜம் ஜம்
எந்நாளும் ராஜா
வேண்டாமே தாஜா
வேறேதும் ரோஜா சேராதடி
இந்நாளும் ராணி வந்திருக்கும் கன்னி
உன் எண்ணம் இங்கே ஆகாதடி
ஆளச் சுத்தும் அல்லித் தண்டு
அட இல்லை இது
ஆளு ரொம்ப குண்டு குண்டு
மூளை கெட்டு மோகம் கொண்டு
அலுக்காமல் இவ கூச்சல் போடும்
மண்டு மண்டு
தள்ளாடும் தேரு
தாங்குவது யாரு
அம்மாடி வேண்டாம் ஆகாது
உன் போல யாரு
ஊர சுத்தும் பேரு
ஆத்தாடி இங்கே வேறாரு
தேகத்துல ஓடுதையா
தீ ஆறு
தீத்து விடு
நம்முடைய தகராறு
தொடு வானம் கடலோடு சேராது
எதனாலும் எம் மனசு மாறாது
அது பலிக்குமா நடக்குமா
உன் தளுக்குதான் ஜெயிக்குமா
தள்ளி விடு சென்று விடு இன்று
ஜஜம் ஜஜம்ஜம்
எந்நாளும் ராஜா
வேண்டாமே தாஜா
வேறேதும் ரோஜா சேராதடி
இந்நாளும் ராணி வந்திருக்கும் கன்னி
உன் எண்ணம் இங்கே ஆகாதடி
பித்தாகிப் பாடி
மதி கெட்டு ஆடி
சதிராட்டம் போடும்
சின்னப் பெண்ணே
எட்டாத தூரம் ஓடோட வேண்டும்
வேண்டாத வேலை வேண்டாம் கண்ணே
எந்நாளும் ராஜா
வேண்டாமே தாஜா
வேறேதும் ரோஜா சேராதடி
இந்நாளும் ராணி வந்திருக்கும் கன்னி
உன் எண்ணம் இங்கே ஆகாதடி