Solai Pushpangale |
---|
ஆஅஆஅஅஆஆஆ
ஆஅஆஆஆஆ
ஆஅஆஅஆஅ
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
ஓஒஓஓஓஒஓஓ
ஓஓஓஒஓஓ
கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம்
தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்
கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்