Soll Soll |
---|
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
தனிமையில் தேயும்
நிலவென நானும் கனவை
பொழுதை ஏன் கலைத்தேனோ
சிலுவையின் பாரம்
தாலியில் தாங்கும் உறவே
உனை நான் நோகடித்தேனோ
இருவரும் சேர்ந்து
பாடவே பாடல் வாங்கினோம்
ஒருவரே பாடி ஓய்ந்ததால்
மவுனமாய் நானும் தேங்கினேன்
ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
ஆஹா ஆஆஆ
மனம் அறியாமல்
புரியும் தீங்கால் மனமே
உடையும் இதுதான் வாழ்க்கை
வெளித்தெரியாமல்
நேரும் காயம் உயிரை குடையும்
கதை தான் வாழ்க்கை
கனவுகள் சூழ்ந்த
காதலே தீராகாவியம்
உறவுகள் ஊமை ஆகினால்
யாவுமே ஆகும் நாடகம்
மாறுமே மாறுமே சோகமே
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்
சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்