Solla Vallaayo Kiliye |
---|
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோஓஒ
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ
வல்ல வேல் முருகன்
ஆஆஅஆஅஆஅஆஆஅ
வல்ல வேல் முருகன்
தனை இங்கு வந்து கலந்து
மகிழ்ந்து குலாவென்று
வல்ல வேல் முருகன்
தனை இங்கு வந்து கலந்து
மகிழ்ந்து குலாவென்று
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோஓஒ
தில்லை அம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான்
தில்லை அம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான்
அவன் செல்வத் திருமகனைஏஏ
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து
மகிழ்ந்து குலாவென்று
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோஓஒ
அல்லிக் குளத்தருகே ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே
அல்லிக் குளத்தருகே ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே
அங்கோர் முல்லைச் செடியதன்பால்
முல்லைச் செடியதன்பால்
செய்த வினை முற்றும் மறந்திடக்
கற்றதென்னவென்று
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோஓஒ
பாலைவனத்திடையேஏஏஏ
பாலைவனத்திடையே
என் கை பற்றி நடக்கையிலே
பாலைவனத்திடையே
என் கை பற்றி நடக்கையிலே
தன் கை வேலின் மிசை ஆணை
தன் கை வேலின் மிசை ஆணை
வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோஓஒ
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ