Sollaamaley Kan Mun Thondrinai |
|---|
சொல்லாமலே
கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில்
புதைந்ததே
உன்னை கண்டேன்
காதல் கொண்டேன் தூக்கம்
இழந்தேன் என்னை மறந்தேன்
தேடும் உறவே
நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை
மறந்திடுமா உன்னில்
உயிரை துளைத்தேன்
சொல்லாமலே
கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில்
புதைந்ததே
இது கனவா
நிஜமா எண்ணம்
அலைமோதுதே
எதுவரையில் எனக்கிந்த
உயிர் வேதனை
என்னை
அறியாமலே கால்கள்
நடை போடுதே வலி
கூட இந்நேரம் சுகமாகுதே
உன் காலடியில்
கிடப்பது மணலில்லை
என் மனம்தான் என்னை
தவிர உந்தன் சுவாசத்தை
யார் அறிவார்
தூரம் சென்றபின்
இதயம் சொன்னது
இதுதான் காதலா
சொல்லாமலே
கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில்
புதைந்ததே
நீ முதலா
முடிவா உள்ளம்
தடம் மாறுதே
முடிவல்லா நிலையென்று
உன்னை பார்க்கிறேன்
விடை தெரியாமலே
காதலில் கலந்தேனடி
இது என்ன மாயங்கள்
புதிரானதே
என் வாழ்க்கையிலே
காதலை உணர்ந்தது
உன்னிடம்தான்
என் உணர்வுக்கு
நீ நிழல் தந்த தாய்மையும்
நீயல்லவா
தூரம் சென்றபின்
இதயம் சொன்னது
இதுதான் காதலா
சொல்லாமலே
கண்முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில்
புதைந்ததே
உன்னை கண்டேன்
காதல் கொண்டேன் தூக்கம்
இழந்தேன் என்னை மறந்தேன்
தேடும் உறவே
நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை
மறந்திடுமா உன்னில்
உயிரை துளைத்தேன்
