Solladaa Vaai Thirandhu Ammaavendru

Solladaa Vaai Thirandhu Ammaavendru Song Lyrics In English


சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன்
உன்னால் இன்று
சொல்ல சொல்ல தாய் மனம்
மெல்ல மெல்ல போய் வரும்
சொல்ல சொல்ல தாய் மனம்
மெல்ல மெல்ல போய் வரும்
தெய்வமே தாயிடம்
தேர் ஏறி ஓடி வரும்

சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன்
உன்னால் இன்று

மலர் இல்லாத தோட்டமா
கனி இல்லாத வாழையா
மகன் இல்லாத அன்னையா
மகனே நீ இல்லையா

மலர் இல்லாத தோட்டமா
கனி இல்லாத வாழையா
மகன் இல்லாத அன்னையா
மகனே நீ இல்லையா

வண்ண வண்ண வான்முகம்
எண்ண எண்ண தேன் தரும்
வண்ண வண்ண வான் முகம்
எண்ண எண்ண தேன் தரும்
தெய்வமே தாயிடம்
தேர் ஏறி ஓடி வரும்


நினைவில் வந்த நிம்மதி
நேரில் வந்ததில்லையா
நினைவில் வந்த நிம்மதி
நேரில் வந்ததில்லையா

மனதில் மட்டும் அன்னையா
மகனே நீ இல்லையா
மனதில் மட்டும் அன்னையா
மகனே நீ இல்லையா

இல்லை இல்லை நீ என
எண்ண எண்ண வேதனை
அன்னையின் வாழ்வும் நீ
இல்லாமல் போய் விடுமோ

சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று