Solladi Barathamatha

Solladi Barathamatha Song Lyrics In English


சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
இத்தனை குரல்கள் அழுகின்ற போதும்
இரண்டு காதும் கேட்காத
இல்லை காதே கிடையாத

சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா

ரத்தம் இன்றி சுதந்திரம் பெற்றோம்
அதுதான் எங்கள் வரலாறு
சுதந்திரம் வாங்கி ரத்தம் சிந்தினோம்
சொல்லடி எது நம் கோளாறு
வாணிகம் நடத்த வந்தவர்
அன்று அரசியல் கொண்டது வரலாறு
அரசியல் நடத்த வந்தவர் இன்று
வாணிகம் செய்வது கோளாறு

மாநில சண்டை மதங்களின் சண்டை
இனங்களின் சண்டை நடக்குதடி
மல்லிகை பூவுக்கும் ஜாதியை வைத்த
மனிதனை திருத்தும் வழியென்னடி

சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா


கங்கை காவேரி நதிகளிலே
நம் கண்ணீர் துளிகளை ஓட விட்டோம்
தூரிகை ஏந்திய கைகளிலே
இன்று துப்பாக்கிகளை ஏந்தி விட்டோம்
சாந்தி சாந்தி என்ற மண்ணிலே
இன்று சடலங்கள் மேலே நடந்து சென்றோம்
காந்தி அண்ணல் சிலை உடைத்து
அதில் கைத்தடி மட்டும் நாம்
எடுத்து கொண்டோம்

கலையில் இசையில் கனிந்த தேசம்
இடியில் கடியில் கருகுவதோ
புத்தன் பிறந்த புண்ணிய பூமி
ரத்த காடாய் மாறுவதோ

சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா