Solladi Barathamatha |
---|
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
இத்தனை குரல்கள் அழுகின்ற போதும்
இரண்டு காதும் கேட்காத
இல்லை காதே கிடையாத
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
ரத்தம் இன்றி சுதந்திரம் பெற்றோம்
அதுதான் எங்கள் வரலாறு
சுதந்திரம் வாங்கி ரத்தம் சிந்தினோம்
சொல்லடி எது நம் கோளாறு
வாணிகம் நடத்த வந்தவர்
அன்று அரசியல் கொண்டது வரலாறு
அரசியல் நடத்த வந்தவர் இன்று
வாணிகம் செய்வது கோளாறு
மாநில சண்டை மதங்களின் சண்டை
இனங்களின் சண்டை நடக்குதடி
மல்லிகை பூவுக்கும் ஜாதியை வைத்த
மனிதனை திருத்தும் வழியென்னடி
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
கங்கை காவேரி நதிகளிலே
நம் கண்ணீர் துளிகளை ஓட விட்டோம்
தூரிகை ஏந்திய கைகளிலே
இன்று துப்பாக்கிகளை ஏந்தி விட்டோம்
சாந்தி சாந்தி என்ற மண்ணிலே
இன்று சடலங்கள் மேலே நடந்து சென்றோம்
காந்தி அண்ணல் சிலை உடைத்து
அதில் கைத்தடி மட்டும் நாம்
எடுத்து கொண்டோம்
கலையில் இசையில் கனிந்த தேசம்
இடியில் கடியில் கருகுவதோ
புத்தன் பிறந்த புண்ணிய பூமி
ரத்த காடாய் மாறுவதோ
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா