Sondam Eppodum Thodarkadaithaan |
---|
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது
இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
இருவர் : செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ
இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
ஆஆஹாஆஹஅஹாஆ ஆஹா
ஓஹோ ஹோ ஹோ ஹோ
நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நிலத்தில் படரும் பனிப் பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
இருவர் : பொன் வண்ணக் கலசம் பூ வண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ
இருவர் : சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்