Sondham Ondrai Thedum (Sad)

Sondham Ondrai Thedum (Sad) Song Lyrics In English


சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி இந்த குரல் கேட்குதா துன்பம் தன்னை தூண்டுதா அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது

வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்

வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்

எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா

வீதி வழி போனால் வெள்ளி ரதம் தரையில் நடந்தாலே தங்க ரதம் தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி


சிறு வீணை தான் எடுத்து விரலாலே அதை மீட்டி உருகி மனம் பாடுதம்மா குறுநகையும் போனதம்மா

சிறு வீணை தான் எடுத்து விரலாலே அதை மீட்டி உருகி மனம் பாடுதம்மா குறுநகையும் போனதம்மா

பாடல் தன்னில் நீ இருக்க பைங்கொடியும்தான் இளைக்க குரல்களிலே நான் துடிக்க குலக்கொடியும்தான் தவிக்க

ஈசன் அருள் எங்கே சென்றது ஏந்திழையின் மனமும் வெறுத்தது தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி இந்த குரல் கேட்குதா துன்பம் தன்னை தூண்டுதா அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி