Sondham Ondrai Thedum (Sad) |
---|
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி இந்த குரல் கேட்குதா துன்பம் தன்னை தூண்டுதா அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது
வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா
வீதி வழி போனால் வெள்ளி ரதம் தரையில் நடந்தாலே தங்க ரதம் தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
சிறு வீணை தான் எடுத்து விரலாலே அதை மீட்டி உருகி மனம் பாடுதம்மா குறுநகையும் போனதம்மா
சிறு வீணை தான் எடுத்து விரலாலே அதை மீட்டி உருகி மனம் பாடுதம்மா குறுநகையும் போனதம்மா
பாடல் தன்னில் நீ இருக்க பைங்கொடியும்தான் இளைக்க குரல்களிலே நான் துடிக்க குலக்கொடியும்தான் தவிக்க
ஈசன் அருள் எங்கே சென்றது ஏந்திழையின் மனமும் வெறுத்தது தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி இந்த குரல் கேட்குதா துன்பம் தன்னை தூண்டுதா அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி