Sondhama Illai |
---|
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
சுற்றம் இல்லை பற்றும் இல்லை
பாசமில்லை நேசமில்லை
பண்புமில்லை அன்புமில்லை
பாசமில்லை நேசமில்லை
பண்புமில்லை அன்புமில்லை
நீதியில்லை தர்மமில்லை
நியாயமில்லை நேர்மையில்லை
நல்லதென்று ஏதுமில்லை
உள்ளம் இங்கு யார்க்குமில்லை
தாயே என் தாயே
எனை ஏன் படைத்தாயே நீ
தாயே என் தாயே
எனை ஏன் படைத்தாயே நீ
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்
வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன்
நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன்
வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன்
நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன்
நீருக்குள் தீயிருக்க கூடுமா என்
நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா
நீருக்குள் தீயிருக்க கூடுமா என்
நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா
எனை நானறிவேன் அதுவே போதும்
உலகம் எதையும் சொல்லும் சொல்லட்டும்
தாயே என் தாயே
எனை ஏன் படைத்தாயே நீ
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்
தர்மத்தை கூண்டில் இன்று
ஏற்றலாம்
நான் எண்ணாத குற்றம்
என் மேல் சாற்றலாம்
ஆனாலும் தர்மம் என்ன சாகுமா
அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா
ஆனாலும் தர்மம் என்ன சாகுமா
அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா
கடலும் நிலமும் கதிரும் நிலவும்
காற்றும் என்னை அறியும் ஒ மை லார்ட்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
சுற்றம் இல்லை பற்றும் இல்லை
பாசமில்லை நேசமில்லை
பண்புமில்லை அன்புமில்லை
நீதியில்லை தர்மமில்லை
நியாயமில்லை நேர்மையில்லை
நல்லதென்று ஏதுமில்லை
உள்ளம் இங்கு யார்க்குமில்லை
தாயே என் தாயே
எனை ஏன் படைத்தாயே நீ
உனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்
நான் எனக்கும் சுமையானேன்