Sonnaalu Vetkam |
---|
சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை
யாரிடம் போவேன் என் கதை சொல்வேன்
இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை
திருமணம் என்பதே இரு மனம் சேர்வது
ஒரு மனம் மாறினால் வாழ்வு என்ன ஆவது
பார்வைகள் மாறினால் காட்சியும் மாறலாம்
கண்களே மாறினால் பாதை எங்கே போவது
அன்புடன் நான் வாழ தேடி வந்த தேவி
இன்று நான் போராட சேதி சொன்ன பாவி
இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை
ஆஆஆஅஆ
ஒரு வழி பாதையில் செல்பவர் மனதிலே
சுயநலம் வளருமே சொந்த பந்தம் மறையுமே
பகலினில் கனவுகள் காண்பவர் வாழ்விலே
உண்மைகள் புரியுமா நன்மை தீமை தெரியுமா
ஒற்றுமை நான் காண ஏற்றி வைத்த தீபம்
வேற்றுமைதான் காண போனதே லாபம்
இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை
யாரிடம் போவேன் என் கதை சொல்வேன்
இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை