Soorai Kaatril |
---|
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
தாயாக வேண்டும் ஆசை கொண்டாள்
தேனாடும் பூவை தேடி வந்தாள்
அது பாம்பாக மாறும் கோலம் கண்டாள்
பாழான பின்னே பாடம் கற்றாள்
பலியான பின்னே நாணம் கொண்டாள்
இனி பண்போடு வாழ எங்கே செல்வாள்
உலகம் உன்னை தூற்றுமே
பொல்லாத வார்த்தை கூறுமே
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
கல்லான போதும் கணவன் தெய்வம்
புல்லான போதும் புருஷன் தெய்வம்
அதை உணராததாலே உள்ளம் நொந்தாள்
அமைதியை எங்கே காண்பதோ
அன்பே இல்லாத பூமியில்
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே