Sooriyana Kandavudan

Sooriyana Kandavudan Song Lyrics In English


சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது

சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது

அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க

சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது

காதல் வந்தால்
தூக்கம் போய் விடும் என்று
கதைகளிலே நானும்
படித்தது உண்டு

சினிமா காதல் எல்லாம்
பாத்திருக்கேன் நான்தான்
பிரிஞ்சா பாட்டெடுத்து
பாடுறது ஏன்தான்

ஒண்ணும் தெரியாது
நானும் தவிக்க
எத்தனையோ கேள்வி
நெஞ்சைத் துளைக்க
என்னவென்று நீ சொல்ல
வா வா ராஜா

அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க


சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது

மாலையில் ஏதேதோ
வாட்டுது என்னை
மாளிகையில் நாளும்
வாழ்ந்திடும் பெண்ணை
குளிரும் வான நிலா
கொதிக்குதையா தீயா
எதுவோ மனசுக்குள்ளே
படுத்துதையா நோயா

என்ன இந்த வியாதி
நானும் அறியேன்
சொல்லத் தெரியாமல்
தேகம் மெலிந்தேன்
என்னவென்று நீ சொல்ல
வா வா ராஜா

அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க

சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது

அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க

சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது