Sooriyana Kandavudan |
---|
சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
காதல் வந்தால்
தூக்கம் போய் விடும் என்று
கதைகளிலே நானும்
படித்தது உண்டு
சினிமா காதல் எல்லாம்
பாத்திருக்கேன் நான்தான்
பிரிஞ்சா பாட்டெடுத்து
பாடுறது ஏன்தான்
ஒண்ணும் தெரியாது
நானும் தவிக்க
எத்தனையோ கேள்வி
நெஞ்சைத் துளைக்க
என்னவென்று நீ சொல்ல
வா வா ராஜா
அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
மாலையில் ஏதேதோ
வாட்டுது என்னை
மாளிகையில் நாளும்
வாழ்ந்திடும் பெண்ணை
குளிரும் வான நிலா
கொதிக்குதையா தீயா
எதுவோ மனசுக்குள்ளே
படுத்துதையா நோயா
என்ன இந்த வியாதி
நானும் அறியேன்
சொல்லத் தெரியாமல்
தேகம் மெலிந்தேன்
என்னவென்று நீ சொல்ல
வா வா ராஜா
அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது