Sree Raamana |
|---|
இசை அமைப்பாளர் : தயன்பன்
ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
உன் ராமனோ மௌனம் கொண்டான்
பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய்
வாழ்வே விடுகதைதானோ
ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
நதியின் வழியே படகும் போகும்
காற்றும் தேவையில்லை
விதியின் வழியே வாழ்க்கை போகும்
கேள்வி தேவையில்லை
எல்லாம் வாழ்வினில் ரெண்டு
இன்பம் துன்பமும் உண்டு
எல்லாம் வாழ்வினில் ரெண்டு
இன்பம் துன்பமும் உண்டு
இதுதான் இங்கு வாழ்க்கையின் பாடங்கள்
அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
பாதை இல்லா நிலவும் நதியும்
பாதை மாறவில்லை
பாதை போடும் மனிதன் மட்டும்
பாதை போவதில்லை
நெஞ்சில் வந்தது புள்ளி
நினைவில் ஆயிரம் கொள்ளி
நெஞ்சில் வந்தது புள்ளி
நினைவில் ஆயிரம் கொள்ளி
யாரிடம் பேசிடும் பைங்கிளி அழகிய
ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்
ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
உன் ராமனோ மௌனம் கொண்டான்
பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய்
வாழ்வே விடுகதைதானோ
ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
